கா1மைஸ்தை1ஸ்தை1ர்ஹ்ருத1ஞானா: ப்1ரப1த்3யன்தேன்யதே3வதா1: |
த1ம் த1ம் நியமமாஸ்தா2ய ப்1ரக்1ருத்1யா நியதா1: ஸ்வயா ||20||
காமைஹி-—பொருள் ஆசைகளால்; தைஹி தைஹி---பல்வேறு; ஹ்ருத-ஞானாஹா---அறியாமையில் சூழப்பட்ட; ப்ரபத்யந்தே—--சரணாகதி அடைகின்றனர்; அந்ய—--மற்ற(வர்களுக்கு; தேவதாஹா---தேவலோக தெய்வங்களுக்கு; தம் தம்—--பல்வேறு; நியமம்—---விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள்; ஆஸ்தாய—-பின்பற்றி; ப்ரக்ருத்யா—--இயற்கையால்; நியதாஹா--—கட்டுப்படுத்தப்பட்டு; ஸ்வயா----தங்களுடைய
BG 7.20: பொருள் ஆசைகளால் அறிவு பறிக்கப்பட்டவர்கள் தேவலோக் கடவுள்களிடம் சரணடைகிறார்கள். அவர்களின் சொந்த இயல்பைப் பின்பற்றி, அவர்கள் தேவலோக தேவர்களை வணங்குகிறார்கள், இந்த தேவலோக ஆளுமைகளை சாந்தப்படுத்துவதற்கான சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள்
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
ஸ்ரீ கிருஷ்ணர் (ஒப்புயர்வற்ற கடவுள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும்போது, எந்த தேவலோகக் கடவுளும் சுயாதீனமாக இருக்க முடியாது. எத்தனையோ அதிகாரிகளின் உதவியோடு குடியரசுத் தலைவர் ஒரு நாட்டை ஆள்வது போல, தேவலோக தேவர்கள் அனைவரும் கடவுளின் அரசாங்கத்தில் சிறிய அதிகாரிகளாக இருக்கிறார்கள். நம்மைப்போன்ற ஆன்மாக்களாகிய அவர்கள், அவர்களின் கடந்தகால வாழ்க்கையில் புண்ணிய செயல்களின் விளைவாக,அவர்கள் மேன்மை பெற்று, பொருள் நிர்வாகத்தில் உயர் பதவியை அ1டைந்துள்ளனர்.
மாயையின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களே விடுவிக்கப்படவில்லை என்பதால் அவர்களால் யாருக்கும் விடுதலை வழங்க முடியாது, இருப்பினும், அவர்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் பொருள் சார்ந்த விஷயங்களை வழங்க முடியும். பொருள் ஆசைகளால் உந்தப்பட்டு, மக்கள் தேவலோக தெய்வங்களை வழிபடுகிறார்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கிறார்கள். பொருள் ஆசைகளால் அறிவை மழுங்கடித்தவர்கள் தேவலோக கடவுள்களை வணங்குகிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.